Wednesday 21 March 2012

உள்ளத்தில் உள்ளவன் ​போதும்

உன் உள்ளத்தில் உள்ளவன் ​போதும்
பாடையில் கிடப்பவன் படையெடுத்து வருவானா
ஆடையே இல்லாதவன் ஆயுதம் ஏந்தி வருவானா
உடையுள்ள நீ உயிருக்குப் பயந்தால்
ஆடையில்லாத அவன் அரசனாகிவிடுவான்
விடையைத் தேடாதே வெற்றி உனக்குத்தான்
குளம் உடைந்தால் அது நீ குளிப்பதற்கு
வெள்ளம் என நினைக்காதே - அதை அடக்க
உன் உள்ளத்தில் உள்ளவன் ​போதும்



No comments:

Post a Comment